இந்தியா - சீனா எல்லையில் 14, 300 அடி உயர மலைச் சிகரத்தில் மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி சிலையை இராணுவம் நிறுவியது.


இந்தியா - சீனா எல்லையில் 14, 300 அடி உயர மலைச் சிகரத்தில் மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி சிலையை இந்திய இராணுவம் நிறுவியுள்ளது.
இந்தச் சிலையை திறந்து வைத்து இந்திய இராணுவத்தின் 14ஆவது படைப்பிரிவின் லெப்டினன்ட் ஜெனரல் ஹித்தேஷ் பல்லா, எக்ஸ் வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது,
"கிழக்கு லடாக் செக்டாரில் சீனாவை ஒட்டியுள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு (எல்ஏசி) பகுதியில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலை நிறுவப்பட்டுள்ளது.
14, 300 மலைச் சிகரத்தில் பாங்கோங் ஏரி பகுதியில் இந்திய இராணுவம் அமைத்துள்ள இந்த சிலை சிவாஜியின் வீரம், தொலைநோக்கு பார்வை மற்றும் அசைக்க முடியாத நீதியின் உயர்ந்த சின்னமாக திகழும். மேலும், வரும் தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கும் ஆதாரமாக இது விளங்கும்.
பண்டையகால சிறப்புகளை சமகால இராணுவ களத்தில் ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளை இந்திய இராணுவம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது" - என்று ஹித்தேஷ் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
