யாழ்.திருநெல்வேலி பாரதிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் நகைகளை திருடிய குற்றத்தில் நான்கு இளைஞர்கள் கைது
5 months ago

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பாரதிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் நகைகளை திருடிய குற்றத்தில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 03ஆம் திகதி வீடொன்றில் நகைகள் திருடப்பட்டதாக கோப்பாய் பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் நேற்றைய தினம் (07) குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் இருந்து ஒரு தொகை நகைகள் மற்றும் பணம் என்பவை மீட்கப்பட்டுள்ளதுடன், 2 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
