அழிவடைந்த வேளாண்மைக்கு நஷ்ட ஈடு, அனுமதியின்றி வெட்டிய வாய்க்காலை மூடுமாறும் கோரி மூதூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்



அழிவடைந்த வேளாண்மைக்கு நஷ்ட ஈடு வழங்குமாறும், அனுமதியின்றி வெட்டப்பட்ட வாய்க்காலை மூடுமாறும் கோரி மூதூர் - பச்சனூர் சந்தியில் இன்று திங்கட்கிழமை (09) விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மூதூர் கமநல சேவைப் பிரிவில் உள்ள சம்மேளனங்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக மூதூர் கங்குவேலி திருக்கரைசை விவசாய சம்மேளனப் பிரிவில் எவருடைய அனுமதியுமின்றி புதிய வாய்க்கால் தோண்டப்பட்டது.
இதனால் கங்குவேலி குளத்திலிருந்தும், மேட்டுநில பரப்பிலிருந்தும் மேலதிக நீர் தமது வேளாண்மை நிலங்களுக்குள் புகுந்தது.
இதன் காரணமாக மூதூர் கமநல சேவைப் பிரிவில் சுமார் 2000 ஏக்கருக்கு மேற்பட்ட வேளாண்மை அழிவடைந்துள்ளது.
இதற்கு அரசாங்கம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
வெள்ளத்தினால் தோண்டப்பட்ட வாய்க்காலை மூடுமாறும் ஆர்ப்பாட்டத்தின் போது விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
