நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கைகளின் போது பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது 685 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களில் 23 பேர் பொலிஸ் தடுப்பு காவலுக்கும் 6 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 676 ஆண்களும் 09 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தேகநபர்களிடமிருந்து 225 கிராம் 49 மில்லி கிராம் ஹெரோயின், 281 கிராம் 323 மில்லி கிராம் ஐஸ் , 6,388 கிராம் மில்லி 385 கிராம் கஞ்சா, 1,037 போதை மாத்திரைகள் மற்றும் 3,957 கஞ்சா செடிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
