மட்டக்களப்பு, வாழைச்சேனை - புலி பாய்ந்தகல் பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போன இருவர் சடலங்களாக மீட்பு
5 months ago

மட்டக்களப்பு, வாழைச்சேனை - புலி பாய்ந்தகல் பகுதியில் நேற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயிருந்த இருவர் இன்று(26) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
மேற்படி இருவரும் நேற்று மாலை அந்தப் பகுதியிலுள்ள பாலமொன்றைக் கடப்பதற்கு முற்பட்ட வேளையில், ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இந்த நிலையில், காணாமல் போயிருந்த குறித்த இருவரும் இன்று சட லங்களாக மீட்கப்பட்டனர்.
சந்திவெளி பகுதியைச் சேர்ந்த 52 மற்றும் 71 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்தனர் என்று வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
