யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் பல்கலைக்கழகத்தில் அமைந்த நினைவேந்தல் தூபியில் நடைபெற்றது.
7 months ago




யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வானது பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவேந்தல் தூபியில் நேற்று நடைபெற்றது.
மேஜர் விநோதரனின் (பாலசுந்தரம் அஜந்தன்) தாயார் திருமதி பாலசுந்தரம் பொதுச்சுடரை ஏற்றினார்.
அதனைத் தொடர்ந்து ஏனையோர் ஈகச் சுடர்களை ஏற்றி, மலர் தூவி உணர்வு ரீதியாக அஞ்சலி செலுத்தினர்.
இதில் மாவீரர்களின் உறவுகள், யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டு நினைவேந்தலில் ஈடுபட்டனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
