
முல்லைத்தீவில் யானை துரத்தியதில் கண்ணிவெடி அகற்றும் மூன்று பெண் பணியாளர்கள் காயம்.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் தெற்குப் பகுதியில் யானை துரத்தியதில் கண்ணி வெடி அகற்றும் மூன்று பெண் பணியாளர்கள் காயமடைந்த சம்பவம் நேற்று(20) மாலை இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய்த் தெற்கு கிராமேசேவகர் பிரிவிற்குட்பட்ட வேம்படி சந்தியில் இருந்து வெலிஓயா செல்லும் பாதை பகுதியில் காட்டுப் பகுதிக்குள் கண்ணிவெடிப் பிரிவைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழு வேலை செய்து கொண்டு இருந்துள்ளது.
அந்தப் பகுதியில் திடீரென யானை ஒன்று வந்து அவர்களைத் துரத்தியுள்ளது.
யானையைக் கண்டவுடன் பயத்தில் பணியாளர்கள் ஓடியுள்ளனர். அதன் போது 3 பெண் பணியாளர்கள் காயமடைந்துள்ளார்கள்.
காயமடைந்த மூவரும் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
