யாழில் பொலிஸ் பொறுப்பதிகாரியின் அச்சுறுத்தலுக்குள்ளானவர் வாள்வெட்டுக்கு இலக்கான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 years ago



பொலிஸ் பொறுப்பதிகாரியின் அச்சுறுத்தலுக்குள்ளானவர் சில மணி நேரங்களில் வாள்வெட்டுக்கு இலக்கான சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் - நெல்லியடிப் பகுதியில் குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

வீட்டு உரிமை தொடர்பாக இரு தரப்பினரிடையே நீண்டகாலமாக ஏற்பட்ட தகராறு தொடர்பாகப் பொலிஸாரிடம் ஒரு தரப்பால் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், மற்றொரு தரப்பை நெல்லியடிப் பொலிஸ் பொறுப்பதிகாரி அச்சுறுத் தியதுடன், அவரது வீட்டு உடைமை களை தூக்கி எறிந்தாகப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பொலிஸாரின் அச்சுறுத்தல் தொடர் பாகப் பாதிக்கப்பட்டவர் காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்துக்குச் சென்று முறையிட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பியபோது இனந்தெரியாத நபர்களால் வாள்வெட்டுக்கு இலக் காகியுள்ளார்.

காயமடைந்தவர் அம்புலன்ஸ் மூலம் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைககள் மேற்கொள்ளப்படுகிறது.