முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 50 பேரினுள் மூன்று பேர் மாத்திரமே அரசாங்க பங்களாக்களை மீள ஒப்படைப்பு. சிங்கள ஊடகம் செய்தி

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 50 பேரினுள் மூன்று பேர் மாத்திரமே அரசாங்க பங்களாக்களை மீள ஒப்படைத்துள்ளதாக பொது நிர்வாகம், நீதிமன்றம், மாகாண சபைகள், உள்ளுாராட்சி மன்றம் மற்றும் தொழிலாளர் அமைச்சின் உள்ளக தகவல்கள் கூறுவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 10 பேர் வீடுகளை ஒப்படைப்பது தொடர்பில் விசாரித்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அரசாங்க பங்களாக்களின் எண்ணிக்கை 50 ஆகும்.
அனைத்து அரசாங்க பங்களாக்களையும் மீள ஒப்படைக் குமாறு பொது நிர்வாகம், நீதி மன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றம் மற்றும் தொழிலாளர் அமைச்சுகளுக்கு அண்மைய தினங்களில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு பங்களாக்களை மீள ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
