முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, கைவேலி சுண்ணாம்புச்சூளை வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் மக்கள் பெரும் சிரமம்





கடும் மழை காரணமாக முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, கைவேலி சுண்ணாம்புச்சூளை வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அந்த வீதியைப் பயன்படுத்தும் மக்கள் பெரும் இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
கடும் மழை காரணமாக முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, கைவேலி சுண்ணாம்புச்சூளை வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அந்த வீதியைப் பயன்படுத்தும் மக்கள் பெரும் இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த பகுதிக்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
சுமார் 1.5 கிலோ மீற்றர் தூரமான சுண்ணாம்புச்சூளை வீதியானது நீண்டகாலமாக புனரமைப்பு இன்றி காணப்படுவதாக அப்பகுதி மக்களால் பாராளுன்ற உறுப்பினருக்குத் தெரியப்படுத்தப்பட்டது.
இதனால் பாடசாலை மாணவர்கள், அவசர மருத்துவ சேவையைப் பெறுவதற்காக செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் நீண்ட காலமாக பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக அப்பகுதி மக்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
தற்போது பெய்துவரும் கன மழை காரணமாக குறித்த சுண்ணாம்புச்சூளை வீதியானது முற்றாக பயன்படுத்த முடியாதவாறு வெள்ளத்தில் முழ்கியுள்ளது.
எனவே, தாம் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு சுண்ணாம்புச் சூளை வீதியை புனரமைத்துத் தருமாறு மக்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த வீதி புனரமைப்புத் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
