சார்க் திரைப்பட தின நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் கலந்து சிறப்பித்தார்.

1 year ago


சார்க் கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மத்திய கலாசார நிலையத்தில் நேற்று (11/09/2024) ஏற்பாடு செய்யப்பட சார்க் திரைப்பட தினம் - 2024 நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

வடக்கு மாகாண பிரதம செயலாளர், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், இலங்கைக்கான நேபாள நாட்டு உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்வின் போது வடக்கு மாகாண ஆளுநர் அவர்கள் உரையாற்றும் போது.

“சார்க் அமைப்பின் அங்கத்துவ நாடு என்ற வகையில் நாம் பெருமை அடைகின்றோம். எமக்கு நீண்டகால வரலாற்றை கொண்ட கலாசாரம் காணப்படுகிறது.

இந்து மற்றும் பௌத்தம் தொடர்பான மிக முக்கிய மெய்யியல் வரலாற்று சிறப்பை கொண்டதே எமது பிராந்தியம்.

அந்த மெய்யியல் தத்துவங்கள் உலகளாவிய ரீதியில் பரவியுள்ளன என்றார்.