
மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்புகளை வழங்காமல் 5 முன்னாள் உறுப்பினர்கள் வெளிநாட்டில் தங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக வீடுகளை பொறுப்பெடுக்கும் நாடாளுமன்ற அதிகாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
சுமார் 80 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
20 உறுப்பினர்களின் வீடுகள் மட்டுமே ஒப்படைக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உடனடியாக வீடுகளை ஒப்படைக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரிகள் நினைவூட்டல் கடிதங்களை அனுப்பியுள்ளனர்.
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதிவெல வீடுகள் வழங்கும் நடவடிக்கை அடுத்த மாதம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சுமார் 40 புதிய உறுப்பினர்கள் வீடுகள் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
