
பூநகரி வனத்துறை காரியாலய அதிகாரிகள் இருவரை அப்பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவர் மரக்கட்டையால் தாக்கியதால் காயமடைந்த இருவர் பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பூநகரி பிரதேசத்தில் காடுகளை வெட்டியமை தொடர்பாக சில மாதங்களுக்கு முன் கைதுசெய்யப்பட்ட ஒருவர் மது அருந்திவிட்டு வன காரியாலயத்தின் யன்னல்களை உடைத்து அரச உடமைகளுக்கு சேதம் விளைவித்ததாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
அதன்படி தாக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
