மானிப்பாய் கிறீன் மருத்துவமனையின் ஒருபகுதியில் இயங்கிவந்த இராணுவ முகாமின் மின்கட்டண நிலுவை 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா என்றும், அந்தத் தொகையை செலுத்தாமல் இராணுவத்தினர் முகாமைவிட்டு வெளியேறியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அண்மையில் அந்த முகாம் இராணுவத்தால் அப்புறப்படுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்தே இராணுவத்தினர் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா மின்சார நிலுவையை வைத்துவிட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் சென்றுள்ள விடயம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர் பத்மதயாளன் ஆண்டகையைத் தொடர்பு கொண்டுகேட்டபோது; "சுமார் நான்கு வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினர் குறித்த கட்டடத் தொகுதியில் தமது முகாமை இயக்கி வந்தனர்.

அந்தக் காலப்பகுதியில் முகாமின் மின் கட்டணமாக 4 இலட்சத்துக்கு 50 ஆயிரம் ரூபா நிலுவை செலுத்தப்படாமல் உள்ளது. இந்தத் தொகையை இராணுவமே செலுத்தவேண்டும் என்று கூறினார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
