கொழும்பு மாநகர சபைக்கு ரூ. 90 மில்லியனை செலுத்த தவறிய தனியார் நிறுவனம்.

1 year ago


கொழும்பு நகரில் வாகனங்களை நிறுத்துவதற்காக தானியங்கி அமைப்பின் ஊடாக பணம் வசூலித்த நிறுவனம் 90 மில்லியன் ரூபாயை கொழும்பு மாநகர சபைக்கு செலுத்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் ஒப்பந்தம் இடை நிறுத்தப்பட்டு இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக போக் குவரத்துப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் மஞ்சுள குலரத்ன தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தில் நிலவும் குறைபாடுகள் காரணமாக அடுத்த வருடத்துக்குள் புதிய இலத்திரனியல் முறைமையை அறிமுகப்படுத்த எதிர்பார்த் துள்ளதாக அவர் கூறினார்.