முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் வெள்ளப் பெருக்கினால் நிலத்தில் புதைக்கப்பட்ட வெடிபொருட்கள் சில வெளிக்கிளம்பின
7 months ago

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் நிலத்தில் புதைக்கப்பட்ட வெடிபொருட்கள் சில வெளியில் தென்பட்டுள்ளன.
முள்ளிவாய்க்கால் பகுதியில் இந்த வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளமை தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி முறைப்பாட்டிற்கமைய, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த பகுதியினை அடையாளப்படுத்தியுள்ளார்கள்.
இது விடுதலைப் புலிகள் காலத்தில் நிலத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
அண்மையில் பெய்த கடும் மழைவெள்ளம் நிலத்தினை அரித்து பாய்ந்துள்ளது.
இதனால் இந்த வெடிபொருள் எச்சங்கள் தென்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றின் அனுமதிபெற்று குறித்த வெடிபொருட்களை சிறப்பு அதிரடிப்படையினரிடம் பாரப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
