மட்டக்களப்பு கரடியனாறில் ஜீப் வண்டி விபத்தில் பாதசாரி காயமடைந்ததோடு, சாரதியான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது
7 months ago

மட்டக்களப்பு, செங்கலடியில் கரடியனாறு பகுதியில் ஜீப் வண்டி மோதியதில் பாதசாரி காயமடைந்ததோடு, ஜீப் வண்டி சாரதியான கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (07) இரவு இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான பாதசாரி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கைதான பொலிஸ் பொறுப்பதிகாரியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கரடியனாறு போக்குவரத்து பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
