ரின் மீன் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் 45 இலட்சத்திற்கும் அதிகமான ரின் மீன்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக உள்ளூர் ரின் மீன் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ஷிரான் பெர்னாண்டோ தெரிவித்தார்.
அதற்காக செலவிட்ட தொகை 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் இரண்டு மில்லியன் டொலர் பெறுமதியான ரின் மீன்கள் இந் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரின் மீன்களை இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சுங்கத்தினூடாக இவ்வளவு பெரிய தொகை எவ்வாறு நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் அவர் கோரியுள்ளார்.
இதன் காரணமாக நாட்டில் உள்ள 16 ரின் மீன் தொழிற்சாலைகள் இடிந்து விழும் நிலையை அடைந்துள்ளதாக ரின் மீன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் கபில பாலசூரிய தெரிவித்துள்ளார்.
வற் வரியின்றி வெளிநாடுக ளில் இருந்து ரின் மீன்கள் இறக் குமதி செய்யப்பட்டாலும், உள் ளூர் ரின் மீன்களுக்கு 18 வீத வற் விதிக்கப்பட்டாலும் உள்ளூர் தொழில்துறை வீழ்ச்சியடைந் துள்ளதாக அவர் மேலும் குறிப் பிட்டார். (அ)
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
