யாழ்.நோக்கி பேருந்தில் பயணித்த முதியவர் ஒருவர் திடீரென மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார்.

1 year ago



யாழ்ப்பாணம் நோக்கி நேற்றுக்காலை பேருந்தில் பயணித்த முதியவர் ஒருவர் திடீரென மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார்.

இளையதம்பி சிவசுப்பிரமணியம் (வயது -71) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பேருந்தில் பயணித்தவர்களால் அவர் உட னடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்    சேர்க்கப்பட்ட நிலையில், அவர் முன்னதாகவே உயிரிழந்து விட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இறப்பு விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம்        மேற்கொண்டார். 

அண்மைய பதிவுகள்