வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் இன்று சடலமாக மீட்பு

1 year ago



வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் இன்று(16) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

26 வயதுடைய தனுசன் என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தவறான முடிவெடுத்தே அவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.