யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.

1 year ago



யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் வைத்தியசாலையில் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்நோக்கியுள்ளனர்.

வைத்தியசாலையின் பிரதான வளாகத்தில் ஒன்றுகூடிய தாதியர்கள், "தாதியர்களுக்குப் பாதீட்டில் சரியான நீதியைப் பெற்றுக்கொடு, குறைக்கப்பட்ட மேலதிக நேரக் கொடுப்பனவை அதிகரி, பதவி உயர்வை பழைய முறைப்படி வழங்கு” ஆகிய பதாகைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் வைத்தியசாலை சேவைகள் முடங்கிய நிலையில் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டதுடன், கிளிக் நோயாளர்கள் வைத்தியசாலைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.